இந்தியா
Trending

அண்ணாமலையை இலவு காத்த கிளி என கலாய்த்த ஜெயக்குமார் – காரணம் என்ன..??

இந்தியா: தமிழ்நாடு

எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது…

மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துகளை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர். அண்ணாவின் கொள்கை லட்சியங்களை பின்பற்றி திரைப்படங்களில் கழகத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்து அதிமுக வெற்றியடைய செயல்பட்டவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பில் பேசிய அவர் கூறுகையில், அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது என்பது இலவுகாத்தகிளி கதை போன்றுதான். தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும் போது தாமரை மலர்வது நடக்காது. அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக உள்ளது. ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை.

2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும். தமிழர்களின் அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது. தமிழர்கள் வீரமும், காதலும் இல்லாதவர்கள் அல்ல என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button