இந்தியா
Trending

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் – ஓபிஎஸ்…!!!

மறு உத்தரவு வரும் வரைக்கும் அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓ பன்னீர்செல்வதிற்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனை அடுத்து ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடந்த வழக்கு டிசம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button