Homeஇலங்கை

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச

விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடவில்லை எனவும், வேறு ஒரு கூட்டணியில் இருந்து தான் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

தனது இராஜினாமா குறித்து மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ,

“அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் எவரும் இதுவரை முன்வரவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி என்னிடம் கருத்துக் கேட்டார் என நினைத்தேன். அதனால் நான் இந்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்தேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பதவியை நான் ஏற்றுக்கொள்வதும், பதவி விலகுவதும், ராஜினாமா செய்வதும் எனக்குச் சாதாரணமானது”. என குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button