இலங்கை
Trending

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி – நுவரெலியாவில் சம்பவம்..!!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button