Homeஉலகம்

இந்தியாவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி

இந்தியாவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; 17 பேர் பலி

இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில்  இடம்பெற்ற தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மருந்து தொழிற்சாலையில் நேற்று புதன்கிழமை (22) 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். மதிய உணவு நேரத்தின்போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது,  அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதுபற்றிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை அவர் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button