இந்தியா
Trending

இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வைக்கூட அடகு வைத்துள்ளது திமுக – கொந்தளித்த சீமான்…!!

தமிழ்நாடு

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியின் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்க்கே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பீகார் முதல்வரான நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசினார். அவர் பேசியது புரியாததால் திமுக பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு கூறினர்.

இதனால் கடுப்பான நிதிஷ்குமார், தென் தலைவர்கள் இந்தி மொழி கற்க வேண்டும். இந்தி மொழிதான் நம் தேசிய மொழி. அதனை கற்காமல் இன்னமும் காலனித்துவ எச்சங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என சாடினார். மேலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வந்த ஆர்ஜேடி தலைவரையும் மொழி பெயர்க்க வேண்டாம் என தடுத்து நிறுத்தினார்.

நிதிஷ்குமார் இந்தி கற்கவேண்டும் என்று கூறிய போது திமுக பிரதிநிதிகள் தங்களின் இந்தி எதிர்ப்பு கொள்கையை வெளிப்படுத்தவில்லை என்றும் அமைதியாக இருந்தனர் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் நிதிஷ்குமாரின் செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது என்றும் நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிதிஷ்குமாரின் கருத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்ற வட மாநில முதல்வர்களைப் போலவே தமிழ்நாடு முதல்வரும் அமைதி காத்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கடந்த வாரம் வெளிவந்த மும்பை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் இந்தி திணிப்பு பேச்சிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அதைவிட பன்மடங்கு வலிமையான நிதிஷ்குமாரின் கருத்திற்கு இன்றுவரை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வைக்கூட அடகு வைத்துள்ள திமுகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. கூட்டணி கூட்டத்தில் குறைந்தபட்ச மொழி உரிமையைக் கூட காக்கத் திறனற்றவர்கள், ஆட்சி அதிகாரத்தை அடைந்து மாநில உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்பதை எப்படி நம்பமுடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாகவும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button