இலங்கை
Trending

இம்மாதம் சடுதியாக அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை…!!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 14 ,664 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 200 ,119 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இந்தியாவிலிருந்து வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத முதல் 15 நாட்களில் இந்தியாவிலிருந்து 13 ,491 சுற்றுலாப்பயணிகள் வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button