இலங்கை
Trending

இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், டெங்கின் தாக்கம் அதிகரித்த பகுதியாக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 5,428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button