இலங்கை
Trending

இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸ் – சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை..!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பரவி வருகின்ற இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ் தொற்று நோய்களுக்கு வைத்திய ஆலோசனை இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, நீண்ட நாட்களாக காச்சல் நிலவினால், உடனடியாக அரச வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வைரஸ் தொற்றுக்கள் காற்றின் மூலம் வேகமாக பரவ கூடியவை. எனவே நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசத்தை அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button