இலங்கை
Trending

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள தடை…!!

இலங்கை கடற்பரப்பிற்குள் ஒரு வருட காலத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் கப்பல்கள் பிரவேசிக்க முடியாத போதிலும், சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை துறைமுகங்களுக்கு வருகை தர முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்றுமொரு விசேட ஆய்வுக் கப்பலை ஈடுபடுத்தி இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்கு சீனா, இலங்கையிடம் அனுமதி கோரியுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button