இந்தியா
Trending

உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட வி.பி.சிங் சிலை – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!!

தமிழ்நாடு

மறைந்த முன்னான பிரதமர் விபி சிங் தனது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர். அத்துடன் சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்.

இந்நிலையில் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் அடிப்படையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.31 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் சார்பில் புதிதாக வி.பி.சிங்கின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துக்கொண்டார். மேலும், வி.பி.சிங் மனைவி சீதாகுமாரி. அவருடைய மகன்கள் அஜயாசிங், அபய்சிங் ஆகியோரும் பங்கேற்றனர். இதுதவிர இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button