உலகம்
Trending

உலகின் இரண்டாவது அதிக வயதான பெண்மணி காலமானார்…!!

உலகின் இரண்டாவது அதிக வயதுடைய பெண்மணியான ஃபுசா தட்சுமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஃபுசா தட்சுமி என்னும் பெண்மணியே தனது 116 வயதில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி தனக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக இவர் காணப்பட்டார்.

ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனையாளாராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது.

இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button