இலங்கை

என் மீது நம்பிக்கை வைத்து ஆணையை தாருங்கள் : தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ரணில் வேண்டுகோள்

என் மீது நம்பிக்கை வைத்து ஆணையை தாருங்கள் : தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ரணில் வேண்டுகோள்

என் மீது நம்பிக்கை வைத்து ஆணையை தாருங்கள் பயனுள்ள, வளமான  நாட்டை கட்டியெழுப்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். 

“ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்வதற்கான ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. 

சர்வமத வழிபாடுகளுடன்  சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை,  ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி.., வெற்றிபெறும் தாய்நாடு , ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 5 பிரதான விடயங்களை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது. 

www.ranil2024.lk என்ற இணையதளத்தில் இந்த தேர்தல் விஞ்ஞானபனத்தை மும்மொழிகளிலும் பார்வையிட முடியும். 

இங்கு மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய பொறிமுறைக்குள் செயற்பட தயாரா? என சஜித் , அநுரவிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். 

உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். 

ஊழல், மோசடிக்காரர்களை கைது செய்வது தொடர்பில் ஏனையோர் இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால்  நாம் ஏற்கனவே அதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிவிட்டோம். 

ஊழலுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து திருடர்களை கைது செய்ய  வழிவகுத்துள்ளேன். 

நான் யாரையும்  பாதுகாக்க  ஜனாதிபதி கதிரையில் அமரவில்லை. 

என் மீது நம்பிக்கை வைத்து ஆணையை தாருங்கள் பயனுள்ள, வளமான  நாட்டை கட்டியெழுப்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button