இலங்கை
Trending

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரமான பொருளுடன் பிரித்தானிய நபர் கைது…!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 தோட்டாக்களுடன் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல வந்தவரையே கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

54 வயதான பார்க்கர் ராபர்ட் மைக்கேல் பிரித்தானிய செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக்கொண்டிருந்தபோது அவரது அவரை சோதனை செய்தபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

விசாரணையின் போது, ​​சந்தேக நபர், ஒரு கலைப்பொருளாக வகைப்படுத்தப்பட்ட ரிவால்வர், தனது பாட்டியிடம் இருந்து பரிசளிக்கப்பட்டதாகக் கூறினார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button