Homeசினிமா

'கருடன்' பட தயாரிப்பாளருடன் மீண்டும் கரம் கோர்க்கும் சூரி

'கருடன்' பட தயாரிப்பாளருடன் மீண்டும் கரம் கோர்க்கும் சூரி

முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற தளத்திலிருந்து கதையின் நாயகன் என்ற தளத்திற்கு உயர்ந்திருக்கும் நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘புரூஸ் லீ’ என்ற திரைப்படத்தையும், ‘விலங்கு’ எனும் இணைய தொடரையும் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ எனும் படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.  இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ‘கருடன்’ எனும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படத்திற்குப் பிறகும் எந்த முன்னணி பட தயாரிப்பு நிறுவனமும் சூரியை அணுகாததால் திரைத் துறையில் இடைவேளை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், வேறு வழி இல்லாமலும், மீண்டும் சொந்த பட தயாரிப்பில் இறங்கி இருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button