இந்தியா
Trending

கொடநாடு வழக்கு; ஜெயலலிதா தெய்வமா இருந்து தண்டிப்பார் – கண்ணீர் விட்ட சசிகலா..!!

இந்தியா: தமிழ்நாடு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல் முறையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு இன்று வருகை தந்தார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் ஓய்வெடுக்க கொடநாடு சென்றனர். அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் கழித்து இப்போது சசிகலா சென்றுள்ளார்.

இந்த நிலையில் கொடநாட்டில் காரில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது…

கொடநாடு எஸ்டேட்டில் வேலை செய்பவர்களை சந்திக்க வந்தேன். எப்போதும் அம்மாவுடன் தான் கொடநாடு வந்துள்ளேன். முதல் முறையாக இன்றைக்கு அம்மா இல்லாமல் வந்துள்ள நிலையில், அவரது நினைவுகளாகவே உள்ளது. இதுபோன்ற ஒரு சூழல் வரும் என நான் நினைக்கக் கூட இல்லை என்று சசிகலா கூறக் கூற அவர் கண்களில் கண்ணீர் கொட்டியது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான கேள்விக்கு, “கொடநாட்டில் சிறு வயது முதலே காவலாளியாக இருந்த ஒரு நல்ல மனிதர் உயிரிழந்துவிட்டார். அம்மா தெய்வமாக இருந்து உண்மையான குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தருவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பதிலளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button