இலங்கை

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சியுடன் சந்தேகநபர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சியுடன் சந்தேகநபர் கைது

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 519 கிலோ 750 கிராம் இஞ்சியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் இராணுவ படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது, இலங்கைக்கு  கொண்டுவரப்பட்ட  இஞ்சியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ப்பட்ட  சந்தேகநபர் மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினாலும், விலை அதிகரிப்பினாலும், இந்தியாவிலிருந்து  பச்சை இஞ்சி கடத்தல் மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர் இஞ்சியை பல பைகளில் பொதி  செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button