இலங்கை
Trending

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டிற்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்தும் (Gita Gopinath) பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை சார்பில், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் பங்கேற்றிருந்தார்.

மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button