உலகம்
Trending

சுற்றி வளைத்த இஸ்ரேல்; இரண்டாக பிளக்கப்பட்ட காசா நகரம் – நள்ளிரவில் உச்சத்திற்கு சென்ற தாக்குதல்..!!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது.

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும் கூட அதை இஸ்ரேல் ஏற்பதாகத் தெரியவில்லை இதற்கிடையே காசா நகரம் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டு இருக்கிறது என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று இரவு காசா மீதான ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், இப்போது காசா இரு பகுதிகளாகப் பிளவுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்போது வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என்று இரு தரப்பாகப் பிளந்து இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரேல் தரப்பு, ஹமாஸுக்கு எதிரான இந்த போர் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காசா மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காசா நகருக்குள் இஸ்ரேல் நுழைய வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வரையும் வடக்கு காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button