இலங்கை
Trending

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு கடும் பாதுகாப்பு – காரணம் என்ன..??

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தற்போது அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் தகவல்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2022 ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது அதனையடுத்து தற்போது திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் தனது தனிப்பட்ட இல்லத்துக்கு திரும்பவுள்ளதாக கூறப்படும் நிலையில் , தகவல் சேகரிப்பு இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button