இலங்கை
Trending

ஜனாதிபதி ரணிலின் நத்தார் வாழ்த்து செய்தி…!!

உலகளவில் இன்றையதினம் ஜேசு பாலன் பிறந்த தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டுவரும் நிலையில், இலங்கையிலும் நத்தார் தினத்தை மக்கள் கொண்டாடி வருக்கின்றனர்.

இநிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில்,

வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள் என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது.

மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

தம்மை எதிர்ப்பவர்களையும், தமக்கு இடையூறு செய்வோரையும் மன்னித்து அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் போக்கிக்கொள்ளுமாறு கிறிஸ்தவ மதம் நமக்கு கற்பிக்கிறது.

மேலும் பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்.

நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்துடன் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் என ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button