இந்தியா
Trending

ஜெயலலிதாவை மனதார பாராட்டிய ஸ்டாலின் – அதிமுகவினர் ஆச்சரியம்…!!!

தமிழ்நாடு

சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதாவை மனதார பாராட்டி பேசியிருப்பது அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது…

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, உங்கள் எல்லோருக்கும் பட்டங்கள் வழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! பெருமைப்படுகிறேன்.

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை, இந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியும் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக் கழகம் இருக்கிறது. அதைவிட சிறப்பு என்னவென்றால், இந்தப் பல்கலைக் கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது.

அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தைதான் பேசுகிறேன். இப்படி முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்து போய்விடும் என்று நினைத்துத்தான் 2013-ஆம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். இப்போது இருக்கக்கூடிய நிலையை நினைத்து நானும் மனமுவந்து பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button