இந்தியா
Trending

தமிழை அழிக்க நினைத்தால் இங்கு கூடியுள்ள இளைஞர் படை உயிரை கொடுக்கவும் தயார் – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்…!!

இந்தியா: தமிழ்நாடு

சேலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்…

ஜனவரி 21ஆம் திகதி எனது வாழ்வில் மறக்க முடியாத நாள். திமுக இளைஞரணி மாநாடு 100% வெற்றியைப் பெற்றுள்ளது. 2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடாக அமைந்துள்ளது. சேலத்தில் வீரத்தோடு திமுகவின் இளைஞர் படை திரண்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பரித்து வஞ்சிக்கிறது. இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் பதிக்க முடியாது. 10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியை விரட்ட தயாராகி விட்டோம். மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர்.

தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்துபோவீர்கள். தமிழை அழிக்க நினைத்தால் மாநாட்டில் உள்ள இளைஞர்கள் உயிரைக் கொடுக்கவும் தயார். திமுகவின் இளைஞரணி மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கிறது. நீட் எதிர்ப்பிற்கு டெல்லியிலும் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி தயாராக உள்ளது.

திமுக ஒருபோதும் தொண்டர்களை கைவிடாது. தொண்டர்களுக்கு ஆபத்து என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் வந்து துணையாக நிற்பார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button