இந்தியா
Trending

தமிழ்நாட்டில் எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை – விளாசிய அண்ணாமலை…!!

இந்தியா: தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் அண்ணாமலை மத்தியில் ஆளும் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக்கூறி வருகிறார். இதேபோல் திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் மக்களிடம் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள தம்மம்பட்டியில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் தொடங்கிவிட்டதாக கூறினார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 31 மாதங்கள் ஆகியுள்ளன நிலையில், அவர்கள் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றார்.

முதல்வர் ஸ்டாலின் 99 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என பொய் கூறி வருவதாகவும் தெரிவித்த அண்ணாமலை பொய் பேசுவது ஒரு வியாதி என்றும் முதல்வருக்கு வந்திருப்பது வியாதி தூக்கமின்மை அவரே கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் நன்றாக தூங்கினால் உண்மையை பேச ஆரம்பித்துவிடுவார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தின் மூலம் திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் மற்றும் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற அண்ணாமலை, இன்னும் இந்த நாட்டில் பல்வேறு பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் மீண்டும் ஐந்தாண்டு ஆட்சியை கேட்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள எந்த எம்பியும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்றும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button