இந்தியா
Trending

தினமும் 25,000 பேருக்கு உணவு வழங்கும் கனிமொழி – சுகாதாரமான முறையில் பொதி செய்து விநியோகம்…!!

தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். ஒரு சிலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்காக கடந்த 3 நாட்களாக உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார் கனிமொழி எம்.பி. லெமன் சாதம், பிரிஞ்சி சாதம் என வகை வகையான ரைஸ்கள் சமைக்கப்பட்டு சுடச் சுட அவைகள் வேனில் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் உணவு விநியோகம் செய்தாலும் கூட அவர்களுக்கு பக்கபலமாக தூத்துக்குடி தொகுதி எம்.பி. என்ற முறையில் கனிமொழியும் தனது பங்களிப்பை செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது தான் படிப்படியாக மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியை போலவே கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உணவு சமைத்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி எம்.பி. உணவு வழங்கி வருகிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நேற்று முன் தினமெல்லாம் தூத்துக்குடியில் உணவு சமைத்து விநியோகம் செய்யும் அளவுக்கு நிலைமை இல்லை. அந்தளவுக்கு மிக மோசமாக இருந்தது. இதனால் மதுரையில் உணவு சமைக்கப்பட்டு அவை 2 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் வேனில் ஏற்றிச் சென்று விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button