இந்தியா
Trending

திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி – தூய்மை பணியில் அண்ணாமலை..!!

தமிழ்நாடு

திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இதற்காக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருச்சி வரும் நிலையில் திருச்சியை சுத்தம் செய்யும் பணி இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வாழை இலைகள், தார்கள் உள்ளிட்ட குப்பைகளை அள்ளினார். அவருடன் 300க்கும் மேற்பட்ட பாஜகவினரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button