இந்தியா
Trending

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி – நேரில் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!

இந்தியா: தமிழ்நாடு

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உயர்கல்வி துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பிரதமர் மோடி 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button