இந்தியா
Trending

துணை முதலமைச்சர் பதவி – உதயநிதி சொன்ன கறார் பதில்…!!

தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் துணை முதலமைச்சர் ஆக வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனது பிறந்தநாளையொட்டி செய்யும் நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அமைச்சர் சேகர்பாபு செய்யும் நலத்திட்ட நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

டிசம்பர் 17 ஆம் திகதியன்று சேலத்தில் நடக்கும் திமுக மாநாட்டிற்கு இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், தாம் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை இல்லை என்றும், அது உங்களின் கோரிக்கை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி கிண்டலாக பதிலளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button