இந்தியா
Trending

தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன் – வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என திட்டவட்டம்…!!

இந்தியா: தமிழ்நாடு

தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவையும் அளித்துள்ளனர். மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமான அளவு இல்லாததால், மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேரில் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என பதில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button