Homeஇலங்கை

தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலானவை எனவும், பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள விசேட தேர்தல் காரியாலயத்தில் அந்த பிரிவுகளுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை தினந்தோறும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொது பேரணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் ஏற்கனவே முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளை விரைவில் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button