இந்தியா
Trending

நம்பியவர்கள் விஜயகாந்த் முதுகில் குத்தினார்கள் – தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம் சொன்ன பிரேமலதா…!!

தமிழ்நாடு

தேமுதிக பொதுச் செயலாளராக தற்போது பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் என அனைவரும் விஜயகாந்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது…

விஜயகாந்த் அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்தித்து எதிர்நீச்சல் போட்டே திரையுலகிலும், அரசியலிலும் முன்னேறினார். அதற்கான வெற்றியை மக்களும் கொடுத்தனர். விஜயகாந்த் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்.

தற்போது பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 2011 வரை தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து இயங்கி வந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் அவர் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரது முதுகில் குத்திவிட்டனர்.

அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என உறுதியாக இருந்தார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மேலும் தேமுதிகவின் வாக்கு வங்கி நிலையாகவே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி மாதத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button