இந்தியா
Trending

நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்? – மத்திய அரசை அட்டாக் செய்த மனோ தங்கராஜ்..!!

தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் வட தமிழகத்தில் ஆடிய கோரத்தாண்டவத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. புயலும், மழை வெள்ளமும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி விட்டு சென்றுவிட்டது. இதனிடையே, இந்த வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.5000 கோடியை முதல்கட்டமாக வழங்குமாறு கேட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால், மத்திய அரசோ முதல்கட்டமாக ரூ.450 கோடியை மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

இன்றைக்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர்கள் (பாஜக) ஆளுகின்ற மாநிலங்களில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், அங்குள்ள ஆளுநர்களின் செயல்பாடுகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடப்பதையும் ஒப்பிட்டு பார்த்தாலே அது தெரியும். ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிராக பேசுவது; ஆளுநர்கள் மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசுவது தான் மற்ற மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம் மிக மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் அதிக அளவில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசுக்கு தருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு தரும் நிதியை விட தமிழகத்துக்கு குறைவான நிதியை தான் மத்திய அரசு கொடுக்கிறது. இப்போது கூட வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5000 கோடியை மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் அவர்களோ வெறும் ரூ.450 கோடியை மட்டுமே தந்திருக்கிறார்கள். நாங்க என்ன பாத்திரத்தை எடுத்து உங்களிடம் (மத்திய அரசு) பிச்சையா கேட்கிறோம். நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம். மத்திய அரசு இப்படி பாரபட்சம் காட்டுவது சரியல்ல. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button