இந்தியா
Trending

நாங்கள் வீடு வீடாக சென்று குடிக்க சொல்கிறோமா? – அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த அமைச்சர் முத்துசாமி…!!

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமியிடம் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது…

அண்ணாமலை பேசியதை நான் இன்னும் பார்க்கவில்லை. அண்ணாமலை இப்படி சொல்லியிருந்தால் நாங்கள், என்ன வீடு வீடாக போய் குடியுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா? வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

வேண்டாம் என்று தான் விளம்பர படுத்திக்கொண்டு இருக்கிறோம். டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை எடுத்த உடனே எல்லாவற்றையும் மூடி விட முடியாது. அரசாங்கத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும் சில சூழ்நிலையின் காரணமாக இதை எல்லாம் நங்கள் அனுமதிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள்(பாஜக) ஆட்சி செய்யும் மாநிலத்தில் இல்லையா? அண்ணமாலை சொல்வதற்காக பதில் சொல்வதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button