இலங்கை
Trending

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்…!!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். வரி அதிகரிக்கப்பட்டமை மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆரம்பக் கட்டமாக எதிர்வரும் 30ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொது மக்கள், சிவில் அமைப்புக்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button