இலங்கை
Trending

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை…!!!

மொனராகலை – குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் தாயார் குழந்தையை தேடிய போதே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தையை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button