இந்தியா

நீ கவர்மென்ட் நடத்துறியா? கந்துவட்டி நடத்துறியா? – மத்திய அரசு மீது சீமான் பாய்ச்சல்…!!

இந்தியா: தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காமல் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.

இந்நிலையில் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசினை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், தூத்துக்குடி வர முடியவில்லை என சீமான் காட்டமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘நீ அரசாங்கம் நடத்துறியா? இல்ல கந்துவட்டி நடத்துறியா? என வரியை எடுத்துட்டு போயிட்டு ஒவ்வொரு தடவையும் நான் கெஞ்சனும்.

பேரிடர் காலங்களில் நாங்கள் உங்களிடம் கையேந்த வேண்டுமா? எங்களை நீங்கள் மதிப்பதில்லை. வெள்ளத்தில் மிதந்து இறந்தோம் தூத்துக்குடியில், அதை உங்களால் பார்வையிட முடியாதா?’ என காட்டமாக பேசியுள்ளார் சீமான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button