இந்தியா
Trending

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை…!!

தமிழ்நாடு

சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பூத் கமிட்டிகளின் பணிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பூத் கமிட்டி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

இத்தனை மாதங்களாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே அதிகார போட்டி தொடர்பான வழக்குகள் நடந்து வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இன்று புதிய கூட்டணி தொடர்பாக ஏதேனும் ஆலோசனை நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button