சினிமா
Trending

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மாயாவை தூக்கிட்டு ஓடிய நபர் – யார்னு தெரியுமா..??

பிக் பாஸ் 7 வீட்டிற்கு இன்று காலை சரவண விக்ரம் வந்தார். அவர் வந்த வேகத்தில் மாயா உள்ளிட்ட பெண்களுடன் ஓரமாக சென்று பேசத் துவங்கிவிட்டார். ஏற்கனவே அனன்யா ராவும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் மாயா, அர்ச்சனாவை தனியாக அழைத்துச் சென்று பேசினார்.

இப்படி வரும் ஆட்கள் எல்லாம் அந்த பக்கமே போனால் எப்படி? எங்களை எல்லாம் கண்ணுக்கே தெரியவில்லையா? கூல் சுரேஷ் வந்தால் இவங்க எல்லாம் காலி. அவர் நம்முடன் தான் பேசுவார் என மணி சந்திராவிடம் கூறினார் விஷ்ணு விஜய்.

இந்நிலையில் விஷ்ணு விஜய் சந்தோஷப்படும்படி கூல் சுரேஷை அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். அவரை வாசல் வழியாக அழைத்து வராமல் வீட்டிற்குள் ஒளித்து வைத்து ஹவுஸ்மேட்ஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கூல் சுரேஷை பார்த்ததும், வந்துட்டான் எங்க ஆளு, எங்கட்ட தான் பேசுவான் என கெத்து காட்டினார் விஷ்ணு. ஆனால் அவரோ முதல் வேளையாக மாயாவை தூக்கிச் சுற்றினார். பின்னர் அக்ஷயாவை தூக்கிக் கொண்டு ஓடினார். அர்ச்சனா கையை பிடித்து சுற்றிவிட்டார். பின்னர் வினுஷா தேவியை தூக்கினார்.

அதன் பிறகு தினேஷ், விஷ்ணு, மணியை தனியாக அழைத்துச் சென்று, நான் நினைச்ச மாதிரியே நீங்க 3 பேரும் இருக்கீங்களேடா என்றார் கூல் சுரேஷ்.

இன்னும் ஏ டீம், பி டீம் தானா என கூல் சுரேஷ் கேட்க, அது அப்படியே தான் இருக்கு என மணி அலுத்துக் கொண்டார். வர வர விஷ்ணுவுடன் சேர்ந்து இந்த மணியின் புலம்பல் ஜாஸ்தியாக இருக்கிறது என கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button