இந்தியா
Trending

புயல் நிவாரண நிதியாக ரூபாய் 10 இலட்சத்தை முதல்வரிடம் வழங்கிய தொல் திருமாவளவன்..!!

தமிழ்நாடு

கடந்த 4ம் திகதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியதுடன் அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்த திருமாவளவன் அவர்கள் ருபாய் 10 இலட்சம் அடங்கிய காசோலையை நிவாரண நிதியாக கையளித்தார்.

இதன்போது விசிக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.எஸ்.பாலாஜி, எம். பாபு, மற்றும் சில நிர்வாகிகள் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button