இலங்கை
Trending

மின்கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்…!!

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் கூறுகையில்,

ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 13 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இருந்தது. எரிபொருட்களில் சிக்கல் ஏற்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது. எனவே ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையும் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button