இந்தியா
Trending

மோடியை தமிழர்னு சொன்ன அண்ணாமலை – சரமாரியாக விளாசிய சீமான்…!!

இந்தியா: தமிழ்நாடு

பிரதமராக பதவியேற்றது முதலாகவே, தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், தமிழ் மொழியின் பெருமையயும், திருக்குறளின் மகிமையையும் நரேந்திர மோடி ஓரிரு வார்த்தைகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கம் போல தமிழ் மொழியையும், தமிழ் கவிஞர்களையும் பாராட்டி பேசினார். இந்நிலையில், இதனை மேற்கொள்காட்டி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ் பாசமும், தமிழ் உணர்வும் இருக்கும் எல்லோருமே தமிழர்கள் தான். அப்படி பார்த்தால், மோடியும் தமிழர் தான்” எனக் கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியது பற்றி நாம் தமிழர் கட்சி சீமானிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில்..

தமிழ் உணர்வுடன் இருக்காரு, அதனால மோடியும் தமிழர்தான் என்றால், தமிழ் வாழ்வதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி வருமா இல்லையா? தமிழர்களுக்காக நீங்க (மோடி) என்ன செஞ்சிருக்கீங்க? மத்திய தமிழராய்ச்சி நிறுவனத்துக்கு நீங்கள் ஒதுக்கிய காசு எவ்வளவு? சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய காசு எவ்வளவு? உலகம் பூரா போய் பேசுனீங்களே உலகின் மூத்த மொழி தமிழ் மொழினு. தற்போது நீங்கள் திறந்து வைத்த நாடாளுமன்றத்தின் முகப்பு கல்வெட்டில் இந்தியும், சமஸ்கிருதமும் தானே இருக்கு. ஏன் தமிழ் மொழியை நீங்கள் பொறிக்கவில்லை?

அப்படியென்றால் நீ என்னை ஏமாத்துகிறாய். இப்படி பல பேர் பேசி பேசி எங்களை ஏமாத்திட்டாங்க தம்பி. இனியும் நாங்கள் ஏமாற மாட்டோம் என சீமான் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button