இலங்கை

யுக்திய நடவடிக்கை ; 690 சந்தேகநபர்கள் கைது !

யுக்திய நடவடிக்கை ; 690 சந்தேகநபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 677  ஆண்களும் 09  பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18  பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 04  பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களிடமிருந்து  89 கிராம்  ஹெரோயின்  ,  231 கிராம் ஐஸ் ,  201 கிராம்  கஞ்சா ,  103 கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button