Homeசினிமா

யோகி பாபுவால் சுண்ணாம்பாகும் தயாரிப்பாளர்கள்.. 60 அசிஸ்டன்ட்களுக்கு தர்ம பிரபு செய்த அநியாயம்

யோகி பாபுவால் சுண்ணாம்பாகும் தயாரிப்பாளர்கள்.. 60 அசிஸ்டன்ட்களுக்கு தர்ம பிரபு செய்த அநியாயம்

கடந்த இரண்டு நாட்களாக யோகி பாபு பற்றி தான் சமூக வலைத்தளங்களில் டாப்பிக் போய்க்கொண்டிருக்கிறது. வலைப்பேச்சியில் உள்ள மூத்த பத்திரிகையாளர்களும், இவரும் மோதிக் கொள்கின்றனர். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு இல்லாததையும், பொல்லாததையும் சொல்கின்றனர் என யோகி பாபு குற்றச்சாட்டு வைக்கிறார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் யோகி பாபுவை பற்றி பல உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். யோகி பாபு ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் செத்து சுண்ணாம்பாகி விடுவார். அந்த அளவிற்கு கடும் டார்ச்சர் கொடுத்து விடுவார். இப்படி பல விஷயங்களை எடுத்துக்காட்டாக சொல்கின்றனர்.

இதற்கிடையில் அஜித்தின் வலிமை படத்தில் யோகி பாபு நடித்ததாகவும். அவர் கொடுத்த ஓவர் டார்ச்சரால் அஜித் அந்த படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டதாகவும் ஒரு தகவலை சொல்கின்றன. இவரை காட்டிலும் வடிவேலு கூட எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் அவர் வாங்கிய பணத்திற்கு ஒழுங்கா நடித்து முடித்துக் கொடுப்பார். ஆனால் யோகி பாபு அதற்கும் வஞ்சகம் செய்கிறாராம்.

யோகி பாபு ஒரு படத்தை முடித்தால் கூட ஒழுங்காக டப்பிங் செல்ல மாட்டாராம். இவரை பிடிப்பதற்காக மொபைல் டப்பிங் வேன் கூட அனுப்புவார்களாம். அந்த வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம். அதுபோக அதில் டப்பிங் சம்பந்தமான வேலை செய்வதற்கு ஒரு ஆளுக்கு 2500 ரூபாய் என மொத்தமாய் பல லட்சங்கள் செலவாகுமாம். அதிலேயும் மண்டேலா பல தொந்தரவுகள் கொடுத்து தயாரிப்பாளர்கள் பணத்தை வீரியம் செய்வாராம்

யோகி பாபுவிடம் இப்பொழுது வரை கிட்டத்தட்ட 60 உதவியாளர்கள் வேலை செய்துள்ளனர். இதுவரை ஒருவர் கூட நிலையாக இருந்தது கிடையாதாம். அவர்களுக்கு 35 ஆயிரம் சம்பளம் கணக்கு காட்டிவிட்டு வெறும் 2000, 1000 என கொடுத்து அநியாயம் செய்வாராம். இப்படி அவர் செய்யும் அநியாயங்களுக்கு அளவே கிடையாது என மூத்த பத்திரிகையாளர்கள் விளாசி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button