உலகம்

லெபனானில் இஸ்ரேல் உக்கிரமான வான்தாக்குதல் - 500 பேர் பலி

லெபனானில் இஸ்ரேல் உக்கிரமான வான்தாக்குதல் - 500 பேர் பலி

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1650க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வான்வெளித்தாக்குதல்களால் முற்றாக அழிக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் சிதைவுகளிற்குள்  சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புபணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,விமான இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்ட தொலைதூர பகுதிகளிற்கு செல்ல முயல்கின்றனர் என தெரிவித்துள்ள லெபான் அதிகாரிகள் இதன்காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு கடந்த 20 வருடங்களாக கட்டியெழுப்பியிருந்த அதன் உட்கட்டமைப்புகளை  இலக்குவைத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button