இந்தியா
Trending

விஜயகாந்துக்கு வந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா?; வந்து விழுந்த கேள்வி – எடப்பாடி சொன்ன பதில்…!!

தமிழ்நாடு

திருச்சி மாவட்டம் முறிசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேல் அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்திற்கு இன்று சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரின்ஸ் தங்கவேலு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் சமயத்தில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தெரியவரும். நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும். தமிழகம், புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு வந்த கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறுமா என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர், தேமுதிக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவர் விஜயகாந்த். இது ஒரு தலைவருக்கு கிடைத்த மரியாதை. இந்த நேரத்தில் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்டது பொருத்தமாக இல்லை என்று படாரென பதிலளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button