இந்தியா
Trending

2021 போல 2024ல் விரட்டி அடிப்போம்; லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் – உதயநிதி…!!

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு, செயல் வீரர்களை உற்சாகப்படுத்துவது என பல பணிகளை செய்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூறி, இந்தியா என்ற பெயரை மட்டும் மாற்றி பாரதம் என்று கொண்டு வந்துள்ளார். திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான். தலைமை சொல்வதை செய்து காட்டுவது தான் செயல்வீரர்கள். எனவே இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத் தருவது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.

குறிப்பாக திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லியது, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது. அதுகுறித்து விளக்கப்படும். இதுக்கு முன்பாக பாஜக 9 ஆண்டுகள் ஆட்சியில் 2023க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் மீண்டும் தற்பொழுது தேர்தல் வந்துள்ள நிலையில் 2040குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறுகிறார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால் அவர்கள் இறந்த பிறகு பாஜக அடிமைகள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

இதனால் நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளை பெற்று திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதல்வரிடம் கையில் ஒப்படைப்போம். 2021 ஆம் ஆண்டு எப்படி தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டி அடித்தோமோ, அதுபோன்று 2024 ஆம் ஆண்டு அடிமைகளின் எஜமானர்களே வீட்டிற்கு விரட்டி அடிப்போம் என்றும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button