இலங்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூனமகேந்திரனை நாட்டிற்குகொண்டுவருவோம் – அனுரகுமார

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூனமகேந்திரனை நாட்டிற்குகொண்டுவருவோம் – அனுரகுமார

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதே தேசிய மக்கள் அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு தப்பியோடிய அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவேதே கட்சியின் முன்னுரிமைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் இடம்பெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்  அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே  தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றும்,ஊழல் மோசடியை ஒழிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனை பெறமுடியும் அவர்களை அடையாளம் கண்டுள்ளோம் அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button