சினிமா
Trending

அனைவரிடமும் திடீரென மன்னிப்பு கேட்ட அர்ச்சனா – ஏன் தெரியுமா..??

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இருப்பவர் அர்ச்சனா தான். இந்த சீசன் 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் சற்று அதிகமாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் ஆண்டனி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் அனைவரும் அர்ச்சனாவிற்கு தான் ஆதாரமாக இருந்தனர். அர்ச்சனா மட்டும் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்க கூடாது என கூறினார். அதன் காரணமாகவே ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்தனர்.

கடந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே நடந்த மோதலில் கமல்ஹாசன் பெரும்பாலும் நிக்சனுக்கு தான் சப்போர்ட் செய்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனாவை கமல் சரியாக பேசவிடவில்லை என அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் ஆகியோரை தான் கமல் சற்று கடுமையாக கண்டித்தார்.

இதையடுத்து அர்ச்சனாவை கமல் வெளுத்து வாங்கும் போது ரசிகர்கள் சிலர் கைதட்டினார்கள். இதைப்பார்த்த அர்ச்சனா தன் பக்கம் தான் தவறு இருப்பதாக நினைத்து நேற்று சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். கடந்த வாரம் நடைபெற்ற சில விஷயங்களை தான் தவறாக புரிந்துகொண்டேன், ஒருபக்கம் இருக்கும் நியாயத்தை தான் நான் பார்த்தேன். எனவே தான் இந்த தவறான புரிதல் ஏற்பட்டது. எனவே அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார் அர்ச்சனா. அவர் மன்னிப்பு கேட்ட பிறகு பூர்ணிமா அர்ச்சனாவை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் அர்ச்சனா மன்னிப்பு கேட்ட பிறகு இந்த பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் நிக்சன் மீது கடும் கோபத்தில் தான் இருக்கின்றனர். அவரை கமல் சரியாக தட்டிக்கேட்கவில்லை என்றே கூறி வருகின்றனர், இருப்பினும் மறுபக்கம் அர்ச்சனாவுக்கு இருக்கும் அதே ஆதரவு தான் இருந்து வருகின்றது. அந்த ஆதரவில் துளி கூட குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button