![](https://dhuruvan.com/wp-content/uploads/2023/11/23-65550c8cbb12b-md.webp)
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.
இம்முறை சீனா ஆங் யாங் ஹாங் 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.