இலங்கை
Trending

இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சனை – அரசின் அதிரடி நடவடிக்கை..!!

சமீப நாட்களாக இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, கிரிக்கெட் பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை முன்வைக்க அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, அலிசப்ரி, மனுச நாணயக்கார, டிரான் அலஸ், ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button